வடக்கு மாகாண ஆளுநர் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வர சிவன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆலய பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
கடந்த வாரம் ஜனாதிபதியினால் வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமையினை ஆரம்பித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட தோடு
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தக்கேணியில் குடத்தில் நீரெடுத்து சிவலிங்க பெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை